Alert: 160 கி.மீ. தொலைவில்‌ மையம்‌ கொண்டிருக்கும் தாழ்வு மண்டலம்…! யாரும் கடலுக்கு போக வேண்டாம்…

காற்றழுத்தத்‌ தாழ்வு மண்டலம்‌ வலுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்‌ கடலில்‌ உருவான காற்றழுத்தத்‌ தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 160.கி.மீ. தொலைவில்‌ மையம்‌ கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்‌ தெரிவித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில்‌ மணிக்கு 40-55 கி.மீ. வேகத்தில்‌ காற்று வீசக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள்‌ கடலுக்கு செல்ல வேண்டாம்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=tVnJKsBuNrk&feature=youtu.be
Subscribe to my YouTube Channel

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல தென் தமிழ்நாடு பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

"2026ஆம் ஆண்டு தமிழகத்தில் பாமக தலைமையில் ஆட்சி"... ஈகோ இல்லாமல் ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் செயல்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்.

Tue Nov 22 , 2022
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கான யூகங்களை 2024 ஆம் ஆண்டு அமைப்போம் என்று கூறினார். தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்பாக தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங்-ஐ நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி […]
anbumani ramadoss

You May Like