சென்னை 165-வது வார்டு கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடல்நலக்குறைவால் காலமானார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாஞ்சில் ஈஸ்வரபிரசாத் 165-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நாஞ்சில் ஈஸ்வரபிரசாத் காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.