#திருச்சி :குளிர்சாதன பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி..!

திருச்சி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள நம்பர் 1 டோல் கேட் அருகில் கூத்தூர் கிராமத்தில் செல்வமணி தனது மகன் அய்யப்பன் (22) வசித்து வருகிறார். மகன் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். நேற்றைய தினத்தில் வீட்டின் அருகில் வசிக்கும் நாகராஜ் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். 


துக்க வீட்டிற்கு சென்ற மகன் இறந்த நபரின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு அதற்கு மின் இணைப்பை கொடுக்க முயன்றுள்ளார். இந்த நிலையில் குளிர்சாதன பெட்டியிலிருந்து திடீரென மின்சாரம் அய்யப்பன் மற்றும் அருகில் நின்ற 2 பேர் மீதும் பாய்ந்துள்ளது. 

இதனால் தூக்கி வீசப்பட்டு அய்யப்பன் சட்டென்று மயக்கமடைந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு விரைவாக திருச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு விரைவில் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அய்யப்பன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கொள்ளிடம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் மகன இறப்பினை குறித்து அந்த வாலிபரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

மாணவி ஏமாற்றியதால் ஆத்திரம்..!! அரசுப் பெண்கள் பள்ளிக்குள் புகுந்து கழுத்தை கிழித்துக் கொண்ட மாணவன்..!! பரபரப்பு

Thu Nov 24 , 2022
காதல் விவகாரத்தில் ஒரு மாணவன், தனது கை, கழுத்தை கத்தியால் தனக்கு தானே கிழித்துக் கொண்டு பெண்கள் பள்ளிக்குள் புகுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர் ஒருவர், அங்குள்ள அரசு விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவன், அங்கு புத்தகப்பையை வைத்துவிட்டு திடீரென மாயமானார். பின்னர், […]
Love

You May Like