திருச்சி(TRICHY) விஸ்வாஸ் நகரில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் குடோன்களில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. 50 தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், அந்தப் பகுதியில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:30 மணியளவில், திருச்சியில் உள்ள விஸ்வாஸ் நகரில், பழைய […]

திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். திருச்சி அருகே உள்ள திருப்பைஞ்சீலி கிராமத்தில் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராமச்சந்திரன்(70). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது பேரனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்திற்கு வந்தவர்களுடன் அமர்ந்து ராமச்சந்திரன் பேசிக் […]

திருச்சியில் பொது கழிப்பிடத்தை பராமரிப்பு செய்து வரும் பெண் ஒருவர், குடிபோதையில் இருந்த 2 நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி, உறையூரில் உள்ள குழுமணி பகுதியில் அமைந்த டாக்கர் ரோடு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகள் […]

மணப்பாறையில், சாதிய ரீதியாக வந்த தகராறில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவன் மீது, மாற்று சமூகத்தை சேர்ந்தவரின் மகன் சிறுநீர் கழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, மணப்பாறையில் விடத்திலாம்பட்டியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சார்ந்த சிறுவனுக்கும், மாற்று சமூகத்தை சேர்ந்த நபருக்கும், சமூக வேறுபாடு காரணமாக தகராறு […]

திருச்சி பகுதியில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராணுவ வீரரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலாஜி. 31 வயதான இவர் குஜராத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராணுவ […]

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி, வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதிகளில் ரவுடியாக அறியப்பட்டவர் பரணிதரன். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பரணிதரன் சமயபுரம் பகுதியில் உள்ள நந்தா நகரில் தனது மனைவி பிரதீபா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை அவரது மனைவி பிரதீபா வேலைக்கு சென்ற பிறகு […]

திருச்சி மாவட்டத்தில் தனது தம்பியின் காதலியுடன் பேசியதால், கூலித்தொழிலாளி ஒருவரை அடித்துக் கொன்ற அண்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் அருகே உள்ள கலிங்கத்துப்பட்டியில் வசித்து வருபவர் சண்முகம். இவருக்கு ஜெகதீசன் (27) மற்றும் சதீஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். ஜெகதீசனின் தம்பி சதீஷ் கண்தீனதயாள் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியில் […]

திருச்சியில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது முன்னாள் காதலன், அவருடன் எடுத்த தனிமையில் இருக்கும் புகைப்படங்களை கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மணப்பாறையில் உள்ள மருங்காபுரி தாலுகாவில் வசித்து வரும் 22 வயது பெண், தனது திருமணத்திற்கு முன்பு மருதப் பட்டியைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கருணாகரன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. […]

திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி யூடியூபர் சாட்டை துரைமுருகன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர். தென்காசி அருகே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி இல்லத்திலும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு நிதி வாங்கியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் […]

திருச்சி நகரில் செல்போன் கேம் விளையாடிய நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாநகரில் அமைந்துள்ள அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ் (47). இவர் பொன்மலையில் அமைந்துள்ள ரயில்வே தொழிற்சாலையில் டெக்னீசியன் ஆக பணியாற்றி வந்தார். சதீஷ் செல்போனில் கேம் விளையாடும் பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. […]