பிக்பாஸ்-6 வைல்ட் கார்டு என்ட்ரி இவர் தான்!!! தனலட்சுமிக்கு டஃப் கொடுக்கும் வகையில் நுழையவிருக்கும் புதிய விருந்தாளி..!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்சமயம் விறுவிறுப்பைத் தொட்டிருக்கிறது. அந்த வீட்டில் அனைதினமும் சண்டை, சச்சரவுகள், குழப்பங்கள் என்று களை கட்டிக் கொண்டு வருகிறது. இதற்கு முன்பே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு புது பிரபலம் வரவிருப்பதாக சொல்லப்படுகிறது.


சென்ற வாரம் நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில், நடப்பு வாரம் குயின்சி இந்த வீட்டை விட்டு வெளியே செல்லவிருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக ஒரு சமூக வலைதள செலிபிரிட்டி உள்ளே நுழைகிறார். ஏற்கனவே சமூக வலைதளத்தில் பிரபலமான தனலட்சுமி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டு பல அதிரடிகளை நிகழ்த்தி காட்டி வருகிறார்.

ஆனால் தற்சமயம் இவருடன் போட்டி போடுவதற்காக யூடியூப் பிரபலமாக திகழ்ந்துவரும் ஆல்பர்ட் அஜய் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. யூடியூபில் அஜயும், அவருடைய மனைவியும் சேர்ந்து போடும் காணொளிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தொடக்கத்தில் இவருடைய காணொளிகளுக்கு சொல்லிக் கொள்ளுமளவிற்கு வரவேற்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் தற்சமயம் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ajay biggboss entry

இதனை காரணமாக வைத்து தான் பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் நுழையவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த விவகாரத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு காணொளியாக வெளியிட்டுள்ளார் பெங்களூரைச் சார்ந்த அஜய். தற்சமயம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்வதற்காக அவர் சென்னைக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனேகமாக இன்று இரவு அல்லது நாளை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் நடிகர் கமல் அவர்களின் முன்னிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இப்போது நிகழ்ச்சி தொடங்கி 50 தினங்களை தாண்டி விட்ட நிலையில், புதிதாக அந்த வீட்டிற்குள் நுழைவிருக்கும் போட்டியாளருக்கு அந்த வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரை பற்றியும் நன்றாகவே தெரிந்திருக்கும்.

இதனை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவர் தன்னுடைய விளையாட்டின் யுக்தியை நிச்சயமாக எதிர்பாக்காத விதத்தில் வெளிப்படுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரையில் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டிருந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த புது நபரை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை நாம் எல்லோரும் எதிர்வரும் நாட்களில் தொலைக்காட்சியில் காணலாம். ஒட்டுமொத்தமாக இனிவரும் வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் பரபரப்பை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.

Newsnation_Admin

Next Post

சாப்ட்வேர் இன்ஜினியரிடம் நூதன முறையில் 32 லட்சம் ரூபாய் மோசடி! சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி விசாரணை!

Fri Dec 2 , 2022
கோயமுத்தூர் போத்தனூர் சிட்கோ பகுதியைச் சார்ந்தவர் ரவிசங்கர்(39). சாப்ட்வேர் இன்ஜினியரான ரவிஷங்கர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் வழங்கிய புகாரில், சென்ற மாதம் 23ஆம் தேதி என்னுடைய telegram செயலிக்கு அமெரிக்காவைச் சார்ந்த சுற்றுலா நிறுவனத்தின் பெயரில் ஒரு லிங்க் வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த லிங்கில் இருந்த கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு உரையாடினேன். எதிர்முனையில் உரையாடிய நபர், நீங்கள் எங்களுடைய நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து […]
20200420144758 cybercrime

You May Like