டிச.8 முதல் மீண்டும்..!! தமிழக மக்களே அலெர்ட்..!! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை மறுநாள் (டிச.5) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது, மேலும் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து டிச.8ஆம் தேதி வட தமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.8 முதல் மீண்டும்..!! தமிழக மக்களே அலெர்ட்..!! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு..!!

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வட தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்பதால் அடுத்த வாரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது 8ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரை வடமாவட்டங்களில் மீண்டும் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

"மெலிந்த உடல்" சக மாணவர்களின் கேலி! இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்!!!

Sat Dec 3 , 2022
கனடா நாட்டில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த பிரபல டிக் டாக் பிரபலம் மேகா தாகூர் திடீரென்று மரணமடைந்த சம்பவம் அவருடைய ரசிகர்களை மிகப்பெரிய கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய மரணத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ஒரு வயதாக இருந்த சமயத்தில் இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இருந்து அவருடைய குடும்பம் கனடாவிற்கு குடிபெயர்ந்தது. கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் தான் இவரும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும் […]
EP MEGHA THAKUR BREAKER OFFPLATFORM

You May Like