உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஷாஹி மஸ்ஜித் இத்காவிற்குள் ஹனுமான் சாலிசாவை ஓத வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபாவின் அழைப்பைத் தொடர்ந்து, அதிகாரிகள் செவ்வாயன்று உத்தரபிரதேசத்தின் மதுராவில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். “புதிய பாரம்பரியம் அல்லது சடங்குகள் எதுவும்” அனுமதிக்கப்படாது என்று மாவட்ட காவல்துறைத் தலைவர் வலியுறுத்தினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் கோவில் மற்றும் கோவில் நகரத்தில் உள்ள ஷாஹி மஸ்ஜித் இத்கா அருகே 1,500-க்கும் மேற்பட்ட போலீசார், ஆயுதம் தாங்கிய காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பள்ளி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.