26 வயது இளைஞர் ஒருவரை 3 ஆண்களும், 3 பெண்களும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.பி அக்ரஹாரா பகுதியில் இந்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. 26 வயது இளைஞர் ஒருவரை 3 ஆண்களும், மூன்று பெண்களும் ஒரு இளைஞரை கொடூரமாக கொன்றுள்ளனர். இளைஞர் மீது கல்லை தலையில் தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளனர். இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், படுகாயம் அடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இருப்பினும் வரும் வழியிலேயே இளைஞர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பாதாமி பகுதியை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த கொடூரமான கொலையின் சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளன. அதில், சுமார் 20 முறை கல்லால் அடித்து கொன்றது தெரியவந்துள்ளது. போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.