ஒரு சிவப்பு நிற சூட்கேஸ்… அதற்குள் இருந்த மனித உடல் பாகங்கள்… இந்த ஒரு தடயம் சென்னை முதல் ஆக்ரா வரை போலீஸாரை அழைத்துச் சென்றது. சூட்கேஸை ரெயிலில் வைத்துச் சென்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க தொடங்கிய விசாரணை, கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிடும் நிலைக்கு கொண்டு சென்றது. அங்கு கிடைத்த மற்றொரு அதிர்ச்சி தடயம், இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் அடையாளத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. கடந்த […]
murder
கேரளாவை மட்டுமின்றி இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கிய சுகுமார குரூப் வழக்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 42 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வரும் சுகுமார குரூப், தென்கிழக்கு ஆசிய நாடான புருனேயில் ‘ஜான் மேனன்’ என்ற பெயரில் தொழிலதிபராக வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், கேரளா க்ரைம் பிராஞ்ச் தற்போது இண்டர்போல் உதவியை நாட திட்டமிட்டுள்ளது. மலேசியா […]
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் சாலையோரம் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் சந்தேக மரணம் என விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், பிரேத பரிசோதனை முடிவில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சுகுணாவுடன் நீண்டகாலமாக பழகி வந்ததாக கூறப்படும் தவுபிக்கை கைது செய்துள்ளனர். சுகுணாவின் மரணத்தைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியதுடன், குற்றவாளியை […]
கடலூர் மாவட்டத்தில் கிணற்றில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், போலீசாரின் தொடர் விசாரணையில் எதிர்பாராத கொலை வழக்காக மாறியுள்ளது. 10 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த ஒருவரின் மரணம், குடும்பத்துக்குள் ஏற்பட்ட உறவு பிரச்சனையுடன் தொடர்புடையது என்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மனைவியுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நபருடன் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கு காரணமானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஓரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா, […]
கள்ளக்காதல் காரணமாக குடும்ப உறவுகள் சிதைந்து, பல நேரங்களில் மனிதர்கள் தங்களின் குடும்பம், பிள்ளைகள், எதிர்காலம் என அனைத்தையும் மறந்து விபரீத முடிவுகளை எடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ஹரியானாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்ததாக அவரது மனைவி மற்றும் அவரது காதலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் வசித்து வந்தவர் 42 வயதான சியாம்வீர் சிங். இவரது […]
திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் விபரீதமாக முடிந்துள்ளது. 32 வயது பெயிண்டரை காரில் மோதி கீழே தள்ளிய மர்ம கும்பல், பின்னர் ஆயுதங்களுடன் விரட்டி சென்று கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வெங்கல் அருகே உள்ள சிற்றத்தூரைச் சேர்ந்த மாரி என்ற ரூபன் (32), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் மீது ஏற்கனவே சில குற்ற […]
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். பரீதாபாத்தில் 42 வயதுடைய சியாம்வீர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது மனைவிக்கும் காமத் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு குறித்து சியாம்வீருக்கு தெரியவந்ததால், மனைவியுடன் அவர் அடிக்கடி தகராறில் […]
கள்ளக்காதல் உறவில் இருந்து விலக முயன்றதால் ஏற்பட்ட ஆத்திரம், சென்னையை அடுத்த பகுதியில் பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது. 12 ஆண்டுகளாக நீடித்த உறவை முடித்துக்கொள்ள பெண் முடிவு செய்த நிலையில், அதனை ஏற்க மறுத்த நபர் அவரை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயது தூய்மைப் பணியாளர் லதா, பூட்டியிருந்த ஒரு வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, முத்தாபுதுப்பேட்டை […]
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பி தாலுகாவைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா (50), கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த நாகராஜ் (55) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த […]
வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்தும் கொடுமை இன்னும் பல குடும்பங்களில் தொடரும் நிலையில், ஹரியானாவில் வரதட்சணையாக எஸ்யூவி கார் கேட்டு இளம்பெண்ணையும் அவரது ஒன்றரை மாத குழந்தையையும் கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டம் ராஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த சோஹில் கானுக்கும், நுஹ் மாவட்டம் சலம்பா பகுதியைச் சேர்ந்த சகுஃப்தாவுக்கும் […]

