தேனி அருகே, கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபரை ஒரு பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே தேவதானப்பட்டியில் மன்மதன் என்பவர் ஜோதிடம் பார்ப்பது, மாட்டு தீவனம் விற்பனை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகி, மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் […]

சேலம் மாவட்டத்தில் 50 வயது பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குறுக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாயி(50). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பெருமாயி கடந்த 11-ம் தேதி இரவு தலையில் கல்லை போட்டு […]

காரைக்காலில் ஓரினச்சேர்க்கை உறவுக்கு மறுப்பு தெரிவித்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அருள்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காரைக்கால் அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை இல்லாததால் தனது சகோதரியின் 9 வயது மகனை தத்தெடுத்து உணர்த்து வந்துள்ளார். அந்த சிறுவன் அங்குள்ள பள்ளியில் […]

மதுரையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பாஜக நிர்வாகி சக்திவேல் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சக்திவேலை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் எனக்கு பதிவு செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர். சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக […]

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்காவில் தாய் ஒருவர் செய்த கொடூர செயல் காண்போரின் நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. தொட்டிலுக்கு பதிலாக, குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து தூங்க வைக்க முயற்சி செய்து, தனது ஒரு மாத குழந்தையை கொலை செய்திருக்கிறார். இப்போது அவர் பத்து முதல் 30 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்கொள்ளவிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் நகரத்தில், 26 வயதான மரியா தாமஸ், தனக்கு ஒரு மாதத்திற்கு முன் […]

கணவனை ஏமாற்றி விட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை, கள்ள காதலன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லாப்பூர் டவுனை சேர்ந்த சாம்ராஜ் பேட்டையில் தீபா (40) என்பவர் தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள பேக்கரிக்கு தீபா அடிக்கடி சென்று வந்த நிலையில், அங்கு வேலை செய்த திவாகர்(37) […]

மகாராஷ்டிரா மாநிலத்தில், தனது தாயுடன் தகாத உறவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது நண்பன் இருப்பதாக எண்ணி, 17 வயது சிறுவன் கொடூரமாக அவரை கொலை செய்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இறந்த நபருக்கும் அவரது தாய்க்கும் எந்த தவறான உறவும் இருக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கொலை செய்த சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது அப்பகுதியினரை அதிர்ச்சியால் ஆழ்த்தியது. கடந்த சனிக்கிழமை அன்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, […]

அமெரிக்காவில் ஒரு தந்தை தனது 5 வயது மகளை கொன்று உடலை துண்டுகளாக வெட்டி, தான் வேலை செய்யும் உணவகத்தின் ஃபிரீசரில் மறைத்து வைத்திருக்கிறார். பின்னர் பல மாதங்கள் கழித்து அந்த வெட்டப்பட்ட உடலை குப்பையை போல் அப்புறப்படுத்தி இருக்கிறார். தற்போது அவருக்கு 30 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவளித்தது. இந்தக் கொடூர செயலால் அந்த நாடே அதிர்ச்சியுற்றது. அமெரிக்காவில் உள்ள நியூ ஹாம்ஸ்பைர் மாநிலத்தில், 34 […]

புதுடெல்லியில், கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட நபரை, கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நபரின் மகன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியைப் பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தயால்பூர் பகுதியில் 58 வயது ஜாஹூருதீன் வசித்து வந்தார். அவர் காலணிகளை தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார். அவரது அண்டை வீட்டுக்காரரான […]

கர்நாடக மாநிலத்தில் தனது 5 வயது மாற்றுத்திறனாளி மகளை கள்ளத்தொடர்பிற்கு இடையூறாக இருப்பதாக கருதி, தாய் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அந்த கொடூர தாயின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த தாயையும் அவருடன் கள்ள தொடர்பில் இருந்த இளைஞரையும் கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது. கர்நாடகா மாநிலம் தார்வார் டவுன் கமலாபுரா கூகார் பகுதியில் […]