பெரிய ஆப்பு…!சிகரெட் விற்பனைக்கு தடை…? மத்திய அரச அதிரடி முடிவு…! முழு விவரம் உள்ளே…

சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சில்லறை சிகரெட் விற்பனையானது புகையிலை கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை பாதிக்கிறது என்று குழு கருதுகிறது. அனைத்து விமான நிலையங்களிலும் புகைபிடிக்கும் பகுதிகளை அகற்றவும் குழு பரிந்துரைத்துள்ளது.

images 2022 12 12T051749.837

WHO வழிகாட்டுதல்களின்படி, இந்திய அரசு புகையிலை பொருட்களுக்கு 75% ஜிஎஸ்டி விதிக்க வேண்டும். சமீபத்திய வரி படி, நாட்டில் பீடிகளுக்கு 22%, சிகரெட்டுகளுக்கு 53% மற்றும் புகையில்லா புகையிலைக்கு 64% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி.யை சேர்த்தாலும், புகையிலை பொருட்கள் மீதான வரி அதிகளவில் உயர்த்தப்படவில்லை என்பதை நிலைக்குழு கவனத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில், சில்லறையில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒற்றை சிகரெட்டாக கிடைப்பதால் ஏராளமானவர்கள் எளிதில் அவற்றை வாங்கி புகைக்கின்றனர். எனவே பாக்கெட்டாக மட்டுமே சிகரெட்டை விற்க வேண்டும் என நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து புதிய விதிமுறையை ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vignesh

Next Post

ஒரே SMS போதும்...! பான் எண் 2 நிமிடத்தில் உங்க ஆதார் உடன் இணைத்து விடலாம்...! எப்படி தெரியுமா...?

Mon Dec 12 , 2022
பான் கார்டை ஆதாருடன் 2023 ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையும் தற்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதிய வருமான வரி போர்டல் ( https://www.incometax.gov.in/iec/foportal/ ) மூலம் தனிநபர்கள் அதை ஆன்லைன் வாயிலாக செய்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் 2023 ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக பான் கார்டை ஆதார் உடன் இணைக்காவிட்டால் செயலிழக்க நேரிடும். SMS […]
ஆதார்-பான் இணைப்பு நாளையே கடைசி.! தவறினால் எவ்வளவு அபராதம் தெரியுமா?

You May Like