பச்ச மண்ணுடா.. 8 வயது மாணவியை புதருக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியர்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பள்ளி மாணவியை சிறு பெண் என்றும் பாராமல் ஜார்கண்ட் மாநிலத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவியை சிறு பெண் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சிங்கம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வந்தவர் தான் 8 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.


சில தினங்களுக்கு முன் பள்ளிக்குப் பக்கத்தில் புதர் அருகே அந்த 8 வயது மாணவியை அழைத்துச் சென்று தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்திருக்கிறார். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து தலைமை ஆசிரியரை கண்டித்ததுடன், கடுமையாக திட்டி அந்த சிறுமியை காப்பாற்றி இருக்கிறார்.

பின் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் கூறப்பட்டிருக்கிறது அவர்கள் வந்து அந்த மாணவியிடம் கேட்கும்போது அவர் தலைமை ஆசிரியர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதை வெளியே சொல்ல கூடாது என்றும் தன்னை மிரட்டியதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதை அறிந்த அந்த கிராம மக்கள் மற்றும் அந்த மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியரை பள்ளிக்குச் சென்று கடும் விமர்சனம் செய்து அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர்.

இதை அறிந்த காவல்துறை உடனடியாக அந்தப் பள்ளிக்குச் சென்று ஆசிரியரை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

Next Post

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்!

Wed Dec 14 , 2022
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் பருவ காலம் முடிவடைந்த பின்னரும் மழை ஓய்ந்த பாடில்லை சமீபத்தில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக, தமிழகத்தில் இந்த மழையினால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சென்னையிலிருந்து தென்கிழக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே நாளை மறுநாள் சென்னை […]
Chennai rain 1

You May Like