தென்னிந்திய திரையுலகில் 80-கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த சீதா ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றிமேல் வெற்றி, மருதுபாண்டி, ஆதி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்த கிணறு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.

இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பார்த்திபனை 2001ம் ஆண்டு விவகாரத்து செய்துவிட்டு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
அப்போது சின்னத்திரை நடிகர் சதீஷை தனது 43வது வயதில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். 2016-ம் ஆண்டு சீதாவுக்கும் சதீஷுக்கும் விவாகரத்தானது. சீதா தற்போது சினிமாவிலும், சின்னத்திரையிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சீதாவின் இரண்டாவது கணவர் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
