மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்.
ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ், மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். முதல் 100 யூனிட்டை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்த மாதம் 31-ம் தேதி வரை மின் இணைப்புதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை சிறப்பு முகாம்களிலோ அல்லது அந்தந்த மின் கோட்டை வாரிய அலுவலகங்களிலோ தங்களது மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம் என ஏற்கனவே கால அவகாசம் கொடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 2.30 லட்சம் பேர் இணைத்துள்ளனர். மேலும் ஆன்லைனில் மூலம் 1.39 லட்சம் பேரும், இது வரை மொத்தம் 1.52 கோடி பேர் இணைத்துள்ளனர். இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.