பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 12ஆம் பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட இருக்கிறது. நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சம் பேர் எழுதவுள்ளனர். அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால், ஹால் டிக்கெட் வெளியிடப்பட இருக்கிறது.

பள்ளிகள் பதிவிறக்கம் செய்த பின் மாணவர்களுக்கு தேர்வுக்கு முன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.