நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் படக்குழுவினரிடம் கோபமடைந்தார் என சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் நாளை 11ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், வாரிசு படத்தை தன்னுடைய மனைவி சங்கீதாவுடன் நடிகர் விஜய் மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தின் திரையரங்கில் பார்க்க திட்டமிட்டிருந்தார். அந்த திரையிடல் நேரம் என்ன? எப்போது வரவேண்டும்? என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அவர்கள் கூறிய நேரத்தில் நடிகர் விஜய் தன்னுடைய மனைவியுடன் அந்த திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார். ஆனால், படத்தின் மிக்ஸிங் இன்னும் முடியவில்லை, இரண்டு மணி நேரம் ஆகும் என்று தெரிவித்திருக்கின்றனர். சொன்ன நேரத்திற்கு நான் வந்து விட்டேன். ஏன் படத்தை இன்னும் தயார் செய்யவில்லை என்று நடிகர் விஜய் கோபப்பட்டுள்ளார். அதன் பிறகு காத்திருந்த விஜய் வாரிசு திரைப்படத்தை பார்த்துவிட்டு சென்றுள்ளார் என கூறப்படுகிறது. நடிகர் விஜய்க்கு திரையிட்ட காட்சி இரவு 8:30 மணி அளவில் முடிவடைந்துள்ளது.