இளைஞர்களே செம குட் நியூஸ்..!! லட்சக்கணக்கானோருக்கு வேலை வழங்கும் டிசிஎஸ் நிறுவனம்..!!

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


கொரோனா தொற்றுக்கு பிறகு உலக பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும், அமேசான் நிறுவனம் 25,000 பணியாளர்களை பணியைவிட்டு நீக்கியது. இந்நிலையில், 2023-24 நிதியாண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாகவும், அதில் 40,000 பேர் புதிதாக வேலை தேடும் இளைஞர்கள் என்றும் டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராகேஷ் கோபிநாத் பேசியுள்ளார்.

இளைஞர்களே செம குட் நியூஸ்..!! லட்சக்கணக்கானோருக்கு வேலை வழங்கும் டிசிஎஸ் நிறுவனம்..!!

அவர் பேசுகையில், கடந்த அக்டோபர், டிசம்பர் மாத காலகட்டத்தில், மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 2, 197 குறைந்திருந்தது. இதற்கு, முந்தைய 18 மாதங்களில் டிசிஎஸ் நிறுவனம் அதிக எண்ணிக்கையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன் விளைவாக, தற்போது ஒப்பிட்டு அளவில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதற்கிடையே, பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் முழுவிகித ஊக்கத் தொகையை ஊழியர்களுக்கு அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..!! இனி யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம்..!! முக்கிய அறிவிப்பு

Thu Jan 12 , 2023
வெளிநாடு வாழ் இந்தியர்கள் 10 நாடுகளில் இருந்து யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்து இந்தியாவின் தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்குள்ள சர்வதேச மொபைல் எண் வழியாக யுபிஐயில் பதிவு செய்து பணம் அனுப்ப அனுமதி வழங்கும்படி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்றுக்கொண்டு […]
994953 947635 upi transactions india

You May Like