தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய, மாநில உளவுப்பிரிவு தகவல் அளித்துள்ளது. ஏற்கனவே, அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பில், 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில போலீசார் ஆகியோர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதுவரை Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அண்ணாமலைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் Z பிரிவு பாதுகாப்பானது அண்ணாமலைக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 22 கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். ‘Z’ பிரிவில் குண்டு துளைக்காத வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் பயன்படுத்தப்படும். ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கும் தனிப்படைக்கு மாதம் ரூ.16 லட்சம் செலவாகும். அண்ணாமலை வீடு, அவர் தங்கும், செல்லும் இடங்களில் 24 மணி நேரமும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.