பயங்கரவாத குற்றச்சாட்டில் சமீபத்தில் டெல்லி போலீசார் இரண்டு நபர்களை போலீசார் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பொழுது அவர்களின் வீட்டில் ரத்தக்கரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கை துண்டுகளும் போலீசார் பிடித்தனர். வடக்கு டெல்லி, பால்ஸ்வா டெய்ரி பகுதியில் துண்டாக்கப்பட்ட உடலை போலீசார் மீட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஜக்ஜித் சிங் என்ற ஜக்கா மற்றும் நௌஷாத் ஆகியோரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பல்ஸ்வா டெய்ரி பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட தங்குமிடத்திலிருந்து இரண்டு கைக்குண்டுகளை மீட்டுள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். அவர்களின் இல்லத்தில் மனித இரத்தத்தின் தடயங்களும் காணப்பட்டதாக போலிஸார் தெரிவித்தனர்.
அறிக்கையின்படி, கொலைக்குப் பிறகு உடல் எட்டு துண்டுகளாக வெட்டப்பட்டது, இறந்தவர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சடலத்தை போலீசார் இன்னும் அடையாளம் காணவில்லை. 20 முதல் 25 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.