உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இதற்காக மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீர் இருப்பு மற்றும் மழைப்பொழிவு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் […]

சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சிலவற்றை தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும், பல நேரங்களில் பெற்றோரின் கவனக்குறைவினாலேயே குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறலாம். அந்த வகையில், தற்போது டெல்லியில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பெற்றோர் தங்கள் குழந்தைகளை பராமரிக்கும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் வழங்குகிறது டெல்லி வளர்ச்சி ஆணையம் சார்பில் கட்டப்பட்ட […]

ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ஒரு நெட்வொர்க் உடன் தொடர்புடையவர்கள் என்றும், மும்பை அண்டர் கிரவுண்டை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படும் 9 நபர்களை டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பிற முக்கிய இலக்குகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நடத்த இந்த சந்தேக நபர்களை […]

தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இன்று டெல்லி செல்கிறார். இன்று (மார்ச் 2) காலை 10:45 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் அவர், டெல்லியில் பாஜக மேலிடத்துடன் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய 4 இடங்களில் […]

இந்த ஆண்டு டிசம்பர் 15 வரை தேசிய தலைநகரான டெல்லியில் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 23,340 பேரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். இந்த தகவலை டெல்லி காவல்துறை வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காணாமல் போன மொத்த நபர்களில், 14,166 பேர் பெண்கள், இது சுமார் 61 சதவீதமாகும், அதே நேரத்தில் 9,174 பேர் ஆண்கள் அல்லது சுமார் 39 சதவீதம் பேர் என்று அந்தத் தரவுகள் […]

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். சித்த மருத்துவத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் மாதவரம் பால்பண்ணை பகுதியில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.2 கோடியில் அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான மசோதா, கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் […]

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்கள் குளிர்காலத்திற்கு முன்பு கொடிய தாக்குதல்களைத் திட்டமிடுவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளன. இதனால் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்திற்கு உளவுத்துறை அமைப்புகள் உயர் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளன. டெல்லி குண்டுவெடிப்பு குறித்து நடந்து வரும் விசாரணைகளுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல பயங்கரவாத முகாம்களை […]