#Alert: 60 கி.மீ வேகத்தில் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று.‌‌..! மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி‌ குறிப்பில்; கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழ்நாடு மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


மேலும் வரும் ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

2023 பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு அறிவிப்பு...! என்னென்ன தெரியுமா...?

Mon Jan 23 , 2023
2023 பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார், மத்திய அரசு வருமான வரி வரம்பை உயர்த்தி, நடுத்தர வரி செலுத்துவோர் உள்ளிட்டோருக்கு நிவாரணம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில். வரவிருக்கும் 2023 பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய […]
money11

You May Like