fbpx

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம்..!!

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் பிரிந்து கிடப்பதால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அருகே பாகனேரியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் பிரிந்து கிடப்பதால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இடைத்தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் கூட்டணி வைக்கமாட்டோம்” என்று தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம்..!!

இதற்கிடையே, அமமுக சார்பில் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படாத நிலையில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சண்முகவேல் தலைமையில் குக்கர் சின்னத்துடன் வீதி வீதியாக சென்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவிக்கும் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேசிய சண்முகவேல், ‘டிடிவி தினகரன் வரும் 27ஆம் தேதி அன்று கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று அறிவிக்க உள்ளார். அமமுக் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் அதிமுகவை மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறி இருக்கிறார். அம்மாவின் ஆட்சியை கொண்டு வரும் வரை அயராது பாடுபடுவோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும்” என்று சண்முகவேல் தெரிவித்தார்.

Chella

Next Post

அரை நிர்வாணமாக செருப்பு திருடிய வட மாநில கும்பல்….! தட்டி தூக்கிய போலீஸ்…!

Tue Jan 24 , 2023
கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சி தரும் விதமாக இருக்கிறது. இது போன்ற குற்ற செயல்களை தடுக்கும் விதமாக மாநிலஅரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அவர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற நடவடிக்கைகளில் பல சமூக விரோத கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி திருட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் விலை உயர்ந்த பொருட்களை திருடினால் கூட […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like