fbpx

நீதிமன்ற வளாகத்தில் அப்படி ஒரு காரணத்திற்காக மகளை சுட்டுக்கொன்ற தந்தை.!

பாகிஸ்தான் நாட்டில் ஒரு இளம் பெண் வசித்து வந்த நிலையில், அவர் கராச்சி நகரை சேர்ந்த ஒரு டாக்டரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின் இருவரும் சேர்ந்து கராச்சியில் வாழ்ந்து வந்த நிலையில் பெண்ணின் தந்தை தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார். மேலும் மகளை ஒரு டாக்டர் கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜராக சென்றபோது அவரை நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே வைத்து பெண்ணின் தந்தை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலை செய்துள்ளார்

இதில் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு நீதிமன்ற வளாகத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ்காரருக்கும் காயம் ஏற்பட்டது. தந்தையே மகளை நீதிமன்றத்தில் வைத்து ஆணவ கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தகவலின் படி அந்நாட்டில் 10 ஆண்டுகளுக்குள் 650 ஆணவ கொலைகள் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Rupa

Next Post

திடீர் பண வரவால் திக்குமுக்காட போகும் ராசிகள்.. குரு கொட்டி குடுக்க போறாரு.!

Thu Jan 26 , 2023
இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி குரு பகவான் தனது இஷ்ட ராசியான மேஷ ராசிக்குள் நுழைய இருக்கின்றார். குரு பகவானின் இஷ்ட ராசியில் அமருவதால் அவர் மகிழ்ச்சியில் அதிகப்படியான பலன்களை அள்ளி வீசப் போகின்றார். இது போன்ற பெயர்சியால் மகிழ்ச்சியிலும், அதிர்ஷ்டத்திலும் பண பலத்திலும் தினமாக போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவான் வந்து அமருவதால் பணப்பிரச்சினைகள் […]
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது இவர்கள்தான்..! இணையதளத்தில் வைரலாகும் குரு பெயர்ச்சி..!

You May Like