ராய்பூரில் 16 வயது மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது கர்ப்பத்தை மறைத்து குழந்தையையும் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தந்தை, அத்தை உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கடந்த 2023-ஆம் ஆண்டு கணவரை பிரிந்து சென்றுள்ளார். அதன் பின்னர் மூன்று மகள்களும் தந்தையின் பராமரிப்பில் இருந்த […]

ஒரு காலத்தில் பெற்றோரின் வயதான காலத்தை தங்களின் பொறுப்பாக நினைத்த பிள்ளைகள் இருந்தனர். ஆனால், இன்றைய அவசர வாழ்க்கையில் பெற்றோருக்கான அன்பும், அரவணைப்பும், பொறுப்பும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது மும்பையைச் சேர்ந்த முன்னாள் துணி வியாபாரி ஒருவரின் மரணம். மும்பையைச் சேர்ந்த சிவச்சரன் ராம் ரத்தன் குப்தா, தனது மூன்று மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அவர்களில் […]

குழந்தைகளை உறவினர்கள், நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் வீட்டில் விட்டுச் செல்லும்போது கூட பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். வெளிப்படையாக நம்பகமானவர்களாக தோன்றுபவர்களே சில நேரங்களில் கொடூர குற்றங்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் 8 வயது சிறுவன் கொலை வழக்கில் வெளியான […]

பிள்ளைகளை நல்ல மனிதர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோரின் மிகப்பெரிய பொறுப்பாகும். ஆனால், சில நேரங்களில் தவறு செய்தாலும் கண்டிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு துணையாக நிற்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் குற்றங்களை தடுக்காமல், மேலும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. கோவையில், மகன் செய்த கொலையை மறைக்க தந்தையே உதவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை – பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையத்தில், தனியாருக்கு சொந்தமான […]

ஒரு குழந்தைக்காக லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஆண்டுக்காண்டு காத்திருக்கும் தம்பதிகள் ஒருபுறம்… பிறந்த குழந்தையின் முதல் அழுகையை கேட்கும் பாக்கியமே இல்லாமல் ஏங்கும் குடும்பங்கள் மறுபுறம். இப்படிப்பட்ட சூழலில், இரண்டாவது குழந்தையும் பெண் என்பதற்காக பிறந்து வெறும் 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தந்தையே தண்ணீர் தொட்டியில் வீசி கொன்றதாக வெளியாகியுள்ள கர்நாடக சம்பவம், பெண் குழந்தைகள் மீதான சமூக மனநிலையை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சிக்கபள்ளாபூர் சாந்திநகரைச் சேர்ந்தவர் […]

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சல்மான் கான். இவருக்கு ஹசின் பானு என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்துடன் மராட்டிய மாநிலம் வாசிம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவி ஹசின் பானுவின் நடத்தையில் சல்மான் கானுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை சல்மான் கான் தனது மனைவி மற்றும் 3 […]

பணம் தர மறுத்த மனைவி மற்றும் மகள்கள் மீது நபர் ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் 65 வயதான செல்வராஜ். கூலித்தொழிலாளியான இவருக்கு 60 வயதான விஜயலெட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 38 வயதான மேனகா என்ற மகளும், 25 வயதான மவுனிகா என்ற மகளும் உள்ளனர். மேனகா தனது கணவருடன் ஏற்பட்ட […]

சமீப காலமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. அதிலும் குறிப்பாக, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தை சேர்ந்த அந்தோணிமுத்து மகன் 45 வயதான மரிய மைக்கேல். லாரி டிரைவரான […]

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தற்போது மிகப் பெரிய கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. பள்ளி, கல்லூரி, வேலை என எந்த இடத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில், சிறுமிகள் தொடர்பான மர்ம மரணங்களும் சமூகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சிக்குட்பட்ட ஏரி கொல்லை பகுதியில் […]

சமீப காலமாக கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பெற்றோர் பிள்ளைகளை கொலை செய்வதும், பிள்ளைகள் பெற்றோரை கொலை செய்வதும் கவலைக்கிடமான அளவில் அதிகரித்து, சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது காஞ்சிபுரத்தில் நடந்துள்ள ஒரு கொடூரமான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் தெருவில், 50 வயதான ஏழுமலை என்பவர் வசித்து […]