ராட்சசன் பட பாணியில்.. பிளாஸ்டிப் பையில் கிடந்த சிறுமியின் சடலம்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் அம்பாவரம் எனும் கிராமத்தில் கடந்த 2021 இல் சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்து போலீசாரால் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த சிறுமியின் உடலானது மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


உடற்கூறு ஆய்வில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இத்தகைய நிலையில், சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பக்கத்து வீட்டுக்காரரான டி.சித்தையா எனும் உறவினர் சிறுமியை கற்பழித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

சிறுமியிடம் பணம் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தி கூச்சலிட்ட காரணத்தால் அருகில் இருந்த கட்டையை எடுத்து சிறுமியை அடித்து கொன்று சாக்கடையில் வீசி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் தற்போது அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

தந்தையால்.. கர்ப்பமான 13 வயது கோவை சிறுமி.. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.!

Thu Jan 26 , 2023
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 13 வயது சிறுமி அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்பு இந்த சிறுமியின் தந்தை உயிரிழந்து விட்டார். எனவே சிறுமியின் தாய் இரண்டாவதாக 35 வயதான விமல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தகைய நிலையில், அச்சிறுமியின் தாய் வேலைக்கு செல்லும் போதெல்லாம் வளர்ப்பு தந்தையாக இருக்கும் விமல் சிறுமியை அடிக்கடி மிரட்டி பாலியல் […]
bigstock Silhouette Of Pregnant Young L 1200x

You May Like