தமிழ்நாட்டில் இந்த தேதியில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை மையம் முக்கிய அறிவிப்பு..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும். பிறகு, மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப்ரவரி 1ஆம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையும். இதன் காரணமாக, இன்று மற்றும் வருகின்ற 29, 30 ஆகிய தேதிகளிலும் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஜனவரி 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் இலங்கையை ஒட்டிய தெற்கு வங்க கடலில் மத்திய பகுதிகளில் 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் சில சமயங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

”ஆத்தி பார்க்கவே ரண கொடூரமா இருக்கே”..!! தெரிஞ்சு கூட இந்த மீனை தொட்றாதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!!

Sat Jan 28 , 2023
ஒரு துளி விஷத்தால் ஒரு நகரத்தை அழிக்கக்கூடிய ஆபத்தான மீன் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். உலகில் பல விஷ உயிரினங்கள் உள்ளன. இவற்றில் பலவும் ஒரு நொடியில் உங்களைக் கொல்லும் அளவுக்கு கொடிய விஷம் கொண்ட விலங்குகளாக உள்ளன. அந்த வகையில், ஸ்டோன்ஃபிஷ் எனப்படும் கல்மீன் குறித்து கேள்விப்பட்டதுண்டா..? இந்த விஷ மீன்கள், வெப்பமண்டல பசிபிக் கடல் பகுதிகள் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த கல்மீன் […]
”ஆத்தி பார்க்கவே ரண கொடூரமா இருக்கே”..!! தெரிஞ்சி கூட இந்த மீனை தொட்றாதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!!

You May Like