மதுரை மாவட்டம் சமயநல்லூர் தொகுதி அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலம் சில தினங்களுக்கு முன்னர் இவருடைய சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் முதல் மரியாதை பிரச்சனை எழுந்துள்ளது. இது குறித்து இருதரப்பினருக்கும் ஏற்பட்ட காதல் குறித்து எம்.சத்திரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தான் இருதரப்பிற்குள் மறுபடியும் தகராறு உண்டாகி கடந்த 24 ஆம் தேதி இரவு 2 கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். சுப்பையா (65), சூர்யா(23), பழனிகுமார் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். ஆகவே கருவனூரில் உள்ள முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலத்தின் வீடு ஜன்னல்கள் நொறுக்கப்பட்டனர். இரண்டு சக்கர வாகனம் மற்றும் காருக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பொன்னம்பலத்தின் மருமகள் வசந்த கோகிலா வழங்கிய புகாரின் அடிப்படையில், திமுகவின் 4வது வார்டு கிளைச் செயலாளர் வேல்முருகன்(38) அருண்(22) திருப்பதி உள்ளிட்ட 15 பேர் மீதும் வேல்முருகன் தரப்பு வழங்கிய புகாரின் அடிப்படையில், பொன்னம்பலத்தின் மகன்கள் மீது சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இவர்களின் முன்னால் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலம் (65), அவருடைய மகன்கள் திருச்சிற்றம்பலம் (45), தில்லையம்பலம் (42), மற்றொரு தரப்பில் வேல்முருகன் (40), செந்தமிழன்( 35), அவருடைய சகோதரர் ராஜ்மோகன் (33) உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.