மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஒரு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போபலாலை சார்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அங்கிருந்து இரண்டு இளைஞர்கள் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக, இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். தன் வீட்டில் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பார்ட்டிக்கு போகலாம் அங்கு விதவிதமான உணவுகள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளனர் .
பின்னர் பார்ட்டி முடிந்ததும் அங்கிருந்து அனைவரும் சென்ற பிறகு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் மயங்கியதும் ஒரு இளைஞரின் துணையுடன் மற்றொரு இளைஞர் பலாத்காரம் செய்து இருக்கிறார். இது தொடர்பாக அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்து இருக்கிறது.