ஷாக்…! ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கலால் வரி கொள்கை அமல்…! மது பானம் விலை 10 சதவீதம் உயரும்…!

ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கலால் வரிக் கொள்கை உத்தரப் பிரதேசத்தில் அமலுக்கு வர உள்ளது.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கலால் வரிக் கொள்கை அமலுக்கு வருவதால், உத்தரப் பிரதேசத்தில் வெளிநாட்டு மதுபானம் மற்றும் பீர் ஆகியவற்றின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. புதிய கலால் கொள்கை 2023-24க்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. அறிக்கையின்படி, வெளிநாட்டு மதுபானம், பீர், சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மாடல் கடைகளின் உரிமக் கட்டணத்தில் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.


புதிய கலால் கொள்கையில் கடைகளில் கேன்டீன் வசதியை நடத்துவதற்கான கட்டணத்தை தற்போது ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அரசு உயர்த்தியுள்ளது. மாஸ்டர் கிடங்கின் பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. லைசென்ஸ் கட்டணம் அதிகரிப்பால் மதுபானங்களின் விலை உயர வழிவகுக்கும்” என்று உபி மது விற்பனையாளர்கள் நல சங்கத்தின் தேவேஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.

தற்போது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை விற்பனை நேரத்தை இரவு 11 மணி வரை நீட்டிக்க மதுபான சங்கம் அந்த நிலையில் தற்போதுள்ள விற்பனை நேரத்தில் அரசு மாற்றம் செய்யவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக இதய மருத்துவரை சந்தியுங்கள் !

Mon Jan 30 , 2023
மாரடைப்பு என்பது இப்போது மிகவும் சர்வ சாதாரணமாக அனைத்து வயதினரையும் தாக்குகின்றன! அது சிலரின் கடைசி நிமிடங்களாக கூட அமைந்து விடுகிறது. அது போன்ற நிலையிலீர்னுந்து நாம் நம்மை தற்காத்து கொள்ள சில அறிகுறிகள் நம்முள் தென்பட்டால் உடனே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கை தோள்பட்டையிலிருந்து மார்பு பகுதி வரை நாம் உணரக்கூடிய வலியாகும். மேலும் இந்த வலியை நம் தாடைகளிலும் முதுகின் […]

You May Like