வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்தார். வாக்காளர் அடையாள அட்டையில் ஏற்கனவே 3 விதமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது, போலி அட்டைகளை உருவாக்க முடியாதபடி கூடுதலாக 3 பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் புதிய பாதுகாப்பு அம்சங்களும் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது குறித்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இந்தாண்டும் புதிதாக வாக்காளர் அட்டைக்கும், மாற்றங்களுக்காகவும் விண்ணப்பித்தவர்கள் என்று 16 லட்சம் பேர் உள்ளனர். பாதுகாப்பு அம்சத்துடன் புதிய வாக்களர் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. தற்போது அச்சடிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக வழங்கப்படவுள்ளது” என்றார்.