அதிகரித்த காற்று மாசு…! ஊழியர்கள் வொர்க் பிரம் ஹோம் செய்ய வேண்டும்…! பிரதமர் உத்தரவு…!

காற்று மாசுபாடு காரணமாக பாங்காக் மற்றும் தாய்லாந்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன ‌.

பாங்காக் மற்றும் தாய்லாந்து மாகாணங்களில் காற்று மாசுபாடு பெரிய அளவில் அதிகரித்து வருவதால், நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் காற்று மாசுபாட்டின் அளவு உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த அளவை விட 14 மடங்கு அதிகமாக இருந்தது. அவசர வேலைக்காக பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டி இருந்தால் முகக்கவசம் அணியுமாறும், ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா மக்களின் ஆரோக்கியம் குறித்து அதிக கவனத்தை கொண்டுள்ளார், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் உள்ளவர்கள், வீட்டை விட்டு வெளியேறும்போது முடக்கவும் அணியுமாறு அறிவுறுத்தி உள்ளார். தேவையில்லாத நடவடிக்கைகளுக்காக மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசாங்க செய்தித் தொடர்பாளர் அனுச்சா புரபச்சாய்ஸ்ரி வலியுறுத்தியுள்ளார்.

Vignesh

Next Post

புயல் எச்சரிக்கை...! திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை...! ஆட்சியர் அறிவிப்பு...!

Fri Feb 3 , 2023
திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கிய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த மண்டலமானது திரிகோணமலைக்கு அருகே 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்கள் […]
Rains Students Rep PTI 190522 1200x800

You May Like