மக்களே…! கோழிகளுக்கு பரவும் நோய்.‌‌..! உடனே இந்த தடுப்பூசியை போட வேண்டும்… இல்லை என்றால் ஆபத்து…!

தருமபுரி மாவட்டத்தில்‌ கிராமப்‌ பொருளாதாரத்தில்‌ முக்கிய பங்கு வகிக்கும்‌ நாட்டினக்‌ கோழிகளுக்கும்‌ மற்ற கோழிகளுக்கும்‌ கோடைக்‌ காலங்களில்‌ வெள்ளைக்‌ கழிச்சல்‌ நோய்‌ ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது. கோழிகளுக்கு எற்படும்‌ வெள்ளைக்கழிச்சல்‌ நோயினை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத்துறை மூலம்‌ வாரத்திற்கு ஒரு முறை கால்நடைமருந்தகங்களிலும்‌ 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவ கிளைநிலையங்களிலும்‌ மற்றும்‌ கால்நடை பாதுகாப்புத்திட்ட முகாம்களிலும்‌ வெள்ளைக்கழிச்சல்‌ நோய்‌ தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

images 2023 02 06T045247.862

இருப்பினும்‌ கோடைக்காலத்தில்‌ வெள்ளைக்கழிச்சல்‌ நோய்‌ ஏற்படுவதை தவிர்க்கும்‌ பொருட்டு முன்னெச்சரிக்கையாக இலவசமாக வெள்ளைக்கழிச்சல்‌ நோய்‌ தடுப்பூசி முகாம்கள்‌ அனைத்து கிராமங்களிலும்‌ 14.02.2023 வரை கால்நடை பராமரிப்புத்துறையில்‌ பணிபுரியும்‌ கால்நடை உதவி மருத்துவர்கள்‌ மற்றும்‌ கால்நடை ஆய்வாளர்கள்‌ மூலம்‌ மாலை நேரங்களில்‌ தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்‌ நோய்‌ ஏற்படுவதை தடுப்பதற்காக தருமபுரி மாவட்டத்திற்கு 1.20 இலட்சம்‌ டோஸ்கள்‌ RDVK தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விவசாயப்‌ பெருங்குடி மக்களும்‌ மற்றும்‌ கோழிகள்‌ வளர்ப்போர்களும்‌ இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள்‌ கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்‌ நோய்‌ தடுப்பூசிப்‌ போட்டு பயன்பெற வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

உலகை உலுக்கிய நிலநடுக்கம்..!! உருக்குலைந்த துருக்கி நாடு..!! 8,000 பேர் பரிதாப பலி..!!

Wed Feb 8 , 2023
மத்திய துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 8,000 பேர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு […]
WhatsApp Image 2023 02 08 at 7.17.32 AM

You May Like