ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த 9 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ச்சியாக 6-வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், “ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டிற்கு பிறகு அதிகபட்சமான வட்டியாக 6.50 சதவீதம் உள்ளது. பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம்.
2023 – 24 நிதியாண்டில் 4-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். கடந்த மாதம்தான் ரெப்போ வட்டி விகிதம் 0.50 காசுகள் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக, வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.