சென்னையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் அரசு மற்றும் நிசான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து வருகிறது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசுக்கும் ரெனால்ட் நிசான் நிறுவனத்திற்குமான ரூ.5,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/stalin.jpg)
ரூ.5,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சுமார் 2 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.