சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..
கிருஷ்ணகிரி மாவட்டம் போர்ச்சம்பள்ளியில் உள்ளூர் திமுக கவுன்சிலர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை தொடர்பாக திமுக கவுன்சிலர் உட்பட 9 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்ததோடு, போராட்டத்தையும் நடத்தியது. அதன்படி நேற்று சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனை முதல் போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
இந்நிலையில் சென்னையில் அனுமதி இன்றி பேரணி நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்..