அதிகாலையில் நமது வாயில் சுரக்கும் எச்சில் அதாவது உமிழ்நீரை முகத்தில் தடவினால் முகப்பருக்கள் மறையும் என்று விஞ்ஞான ரீதியாக சொல்லப்படுகிறது. இதுதவிர இதில் அடங்கியுள்ள சத்துகள் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்
நமது வாயில் சுரக்கும் உமிழ்நீரானது உணவை ஈரப்படுத்தி உட்கொள்ளவும், செரிமானம் செய்யவும் உதவுகிறது. இதுமட்டுமல்லாமல், நாவை அசைத்து மொழி பேசவும் உதவுகின்றது. இந்த உமிழ்நீர் உணவு துகள்களை கரைப்பதால் உணவின் சுவை உணரப்படுகிறது. இந்தநிலையில் அதிகாலையில் சுரக்கும் எச்சிலை எழுந்தவுடன் முழுங்காமல் வெளியில் துப்புவதும் நம்முடைய பழக்கம். ஏனென்றால், அந்த எச்சிலை முழுங்கினால் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் என்பார்கள். ஆனால், காலையில் சுரக்கும் எச்சிலில் ஹிஸ்டாடின்கள், மியூசின்கள், Cathelicidins போன்ற செயலில் உள்ள பெப்டைட்களின் வளர்ச்சி காரணிகள் மற்றும் அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அந்த எச்சிலை முகத்தில் இருக்கும் தடவினால் பருக்கள் மறையும் என்று விஞ்ஞான ரீதியில் சொல்லப்படுகிறது.
மேலும் இந்த உமிழ்நீர் சுரப்பதால் வாயில் ஏதேனும் காயங்கள் இருந்தாலும் அது விரைவில் குணமடைய உதவிசெய்கிறது. அதேபோல், உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு எச்சிலை தடவினால் விரைவில் புண் ஆறிவிடும். இந்த உமிழ்நீர், பற்கள் மற்றும் வாயை உடல் ரீதியாக அழித்து அல்லது சுத்தம் செய்வதன் மூலம் உணவு நீர் அல்லது காற்றில் பரவும் பாக்டீரியா அல்லது வைரஸ்கள் இல்லாமல் இருக்க உதவு செய்கிறது. மேலும் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் அதிகளவு அமில தன்மை இருப்பதால், அதனை வாய்வழியாக உமிழ்நீர் வெளியே எடுத்து நம்மை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.