இந்தியாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்.. 4,000 கோழிகள், வாத்துக்களை அழிக்கும் பணி தொடக்கம்..

பறவைக் காய்ச்சல் பரவலால், கோழிகள் மற்றும் வாத்துகள் உட்பட சுமார் 4,000 பறவைகளை அழிக்கும் செயல்முறையைப்பதற்கான செயல்முறையை ஜார்கண்ட் மாநில அரசி தொடங்கி உள்ளது..

ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் அரசு நடத்தும் கோழிப்பண்ணையில் H5N1, பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.. அந்த பண்ணையில் 800 பறவைகள் இறந்ததாகவும், 103 பறவைகள் அழிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இதைத் தொடர்ந்து “பண்ணையை 1 கிமீ சுற்றளவில் பாதிக்கப்பட்ட பகுதியில் கோழிகள் மற்றும் வாத்துகள் உட்பட மொத்தம் 3,856 பறவைகளை அழிக்கும் பணிகள் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கடந்த 2 ஆம் தேதி பண்ணையில் பறவைகள் இறக்கத் தொடங்கியதை அடுத்து, பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.. அந்த சோதனையின் முடிவில் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.


மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பண்ணையிலிருந்து 1 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளை பாதிக்கப்பட்ட மண்டலமாகவும், 10 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகள் கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கோழி மற்றும் வாத்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

பறவை காய்ச்சலை சமாளிக்க மாநில அரசு உஷார் நிலையில் இருப்பதாக கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) அருண்குமார் சிங் தெரிவித்துள்ளார்.. மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளை கண்காணிக்கவும், பெரிய பண்ணைகளில் கோழி, வாத்து மாதிரி எடுக்கவும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் மாதிரிகளை சேகரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கும் பறவைக்காய்ச்சல் பரவக்கூடும்.. கடுமையான மேல் முதுகுவலி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சளி மற்றும் சளியில் இரத்தம் ஆகியவை பறவைக் காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகளாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கால்நடை பராமரிப்புத் துறையினர், பறவைகள் இறந்து கிடப்பதைக் கண்டால், தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளனர்.

RUPA

Next Post

சென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை……! 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் ஏர் இந்தியா நிறுவன ஊழியர் அதிரடி கைது…..!

Sun Feb 26 , 2023
விமான நிலையத்தை பொருத்தவரையில் அவ்வப்போது சுங்கவரி துறையினர் அதிரடி சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். அப்படி அடிக்கடி நடைபெறும் சோதனைகள் பல்லாயிரக்கணக்கான வைரம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் கொழும்புவில் இருந்து நேற்று விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களுடைய உடமைகளையும் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 ஆண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் உண்டானதால் அவர்களை சுங்கவரித்துறை அதிகாரிகள் […]
trichy airport 1

You May Like