திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையறும்பு பழைய பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கன்னியப்பன் இவருடைய மகள் கார்த்திகா ஜோதி(18) இவர் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே தனியார் கல்லூரியில் சக்தி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த சூழ்நிலையில், கடந்த 21ஆம் தேதி விடுதியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக தெரிவித்து ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் நேற்று திடீரென்று உயிர் இழந்தார்.
இந்த நிலையில், கார்த்திகா ஜோதியின் உடலை திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றார்கள். அதோடு தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க மாணவியின் உயிரிழப்பின் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் மருத்துவமனை உண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.