வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அதை வெற்றி தொடர்களை கொடுத்தவர் ராதிகா சரத்குமார் சித்தி, வாணி ராணி, செல்லமே, செல்வி என்று பல சூப்பர் ஹிட் நெடுந்தொடர்களை வழங்கி உள்ளார். இவர் தற்சமயம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி என்ற தொடரில் நடித்து வருகின்றார்.
இந்த சூழ்நிலையில் மிக விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் ராதிகா சரத்குமார் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ராதிகாவின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ் சி ஏ சந்திரசேகர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த தொடரின் குரோமோ மிக விரைவில் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.