எச்சரிக்கை.. செயற்கை இனிப்புகளால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம்.. புதிய ஆய்வில் தகவல்..

செயற்கை இனிப்புகள் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது..

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை குறைக்க முயற்சிக்கும் மக்கள், தங்கள் உணவில் செயற்கை இனிப்புகளை பரவலாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த ஜீரோ கலோரி இனிப்புகளில் உள்ள எரித்ரிட்டால் என்ற மூலப்பொருள் இரத்த உறைவு, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன… நேச்சர் என்ற மருத்துவ இதழில், க்ளீவ்லேண்ட் கிளினிக் லெர்னர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (Cleveland Clinic Lerner Research Institute) ஆராய்ச்சியாளர்கள் ஒரு கட்டுரையை வெளியிட்டனர்.. அதன்படி, இரத்தத்தில் அதிக அளவு எரித்ரிட்டால் இருந்தால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு இருமடங்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது…

Artificial sweeteers GettyImages 1263770579 2000 406684eb59794b38b3e7b7d63916ec31

அந்த ஆய்வில் “ அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 4,000 க்கும் மேற்பட்ட மக்களின் இரத்தத்தில் அதிக எரித்ரிட்டால் அளவு இருப்பது கண்டறியப்பட்டது.. அவர்கள் கடுமையான இதய நோய்களுக்கு ஆளாகின்றனர். எரித்ரிட்டால் இரத்த பிளேட்லெட்டுகளை செயல்படுத்துவதை எளிதாக்குவதுடன் ஒரு உறைவை உருவாக்குகிறது.. இந்த பொருளை உட்கொள்வது இரத்த உறைவு உருவாக்கத்தை அதிகரிக்கிறது, இது இறுதியில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூத்த எழுத்தாளர் ஸ்டான்லி ஹேசன் பேசிய போது “எரித்ரிட்டால் போன்ற இனிப்புகள் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்து வருகின்றன.. ஆனால் அவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்து இன்னும் ஆழமான ஆராய்ச்சி தேவை.. இதய பாதிப்புகள் காலப்போக்கில் உருவாகும் என்பதால், ஒரு நபர் என்ன சாப்பிடுகிறார் என்பதையும், நமது உணவுகளில் இதய நோய்க்கு மறைவான பங்களிப்புகள் உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டியது அவசியம்.. செயற்கை இனிப்புகளின் நீண்டகால விளைவுகளை ஆய்வு செய்ய, மேலும் பல பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்படுவது முக்கியம்..” என்று தெரிவித்தார்..

எரித்ரிட்டால் போன்ற செயற்கை இனிப்புகள், குறைந்த கலோரி, குறைந்த கார்போஹைட்ரேட் தயாரிப்புகளில் சர்க்கரைக்கு மாற்றாக உள்ளன. சர்க்கரை அல்லது கலோரி உட்கொள்ளலை நிர்வகிக்க வேண்டியவர்களுக்கு எரித்ரிட்டால் கொண்ட சர்க்கரை இல்லாத தயாரிப்புகள் பரிந்துரைக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

1newsnationuser1

Next Post

மாணவிகளின் உயிரோடு விளையாடும் கொடூரம்..!! பள்ளிக்கு செல்வதை தடுக்க விஷம் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்..!!

Tue Feb 28 , 2023
ஈரானின் தெற்கு டெஹ்ரானில் அமைந்துள்ள கோம் பகுதியில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பள்ளிச் சிறுமிகள் ஏராளமானோருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில்தான், ஈரானின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூநெஸ் பனாஹி, பள்ளிச் சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோம் பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் ஏராளமானோருக்கு விஷம் […]
மாணவிகளின் உயிரோடு விளையாடும் கொடூரம்..!! பள்ளிக்கு செல்வதை தடுக்க விஷம் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like