”என் பொண்டாட்டிய நீ எப்படி தொடலாம்”..? டாக்டருக்கு ’பளார் பளார்’..!! கணவர் மீது கேஸ்..!! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வினோத வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதாவது, தனது மனைவிக்கு சிகிச்சை அளிக்கும்போது கேரளாவை சேர்ந்த நபர், தனது மனைவிக்கு சிகிச்சை பார்க்கும் போது மருத்துவர் தனது மனைவியை தொட்டதாக கூறி, அவரது கணவர் மருத்துவரை தாக்கியுள்ளார். ஜனவரி 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு விபத்தில் 27 வயது பெண் காயமுற்று இருக்கையில், அப்போது அந்த பெண்ணின் கணவர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர் சிகிச்சை அளிக்க முயன்றபோது, தனது மனைவியின் உடல் பாகங்களை மருத்துவர் தொட்டார் எனக்கூறி, அந்த மருத்துவர் சட்டையை பிடித்து அந்த பெண்ணின் கணவர் அடித்துள்ளார்.


இதனை அடுத்த அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தனக்கு ஜாமீன் வழங்குமாறு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். அதில், மருத்துவர் எப்படி நோயாளியை தொடாமல் சிகிச்சை அளிக்க முடியும்.? மருத்துவர்கள் கழுத்தில் எப்போதும் ஸ்டெதஸ்கோப் இருக்கும். அதனை வைத்து மார்பில் தொட்டு இதயத்துடிப்பு பார்க்க வேண்டும். இதனையெல்லாம் மருத்துவர்கள் செய்யாமல் விட்டுவிட்டால் அது பெரிய ஆபத்தாக மாறிவிடும் என கூறினார்.

மேலும், ஏதேனும் ஒரு சில மருத்துவர் தவறான நோக்கத்துடன் நோயாளிகளை அணுகினால் அதனை சுட்டிக்காட்ட வேண்டியதும் கடமை எனவும் குறிப்பிட்டார். இந்த வழக்கில் மருத்துவரை தாக்கியவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CHELLA

Next Post

1.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் நிறுத்தம்..!! வரும் 11ஆம் தேதி வெடிக்கும் போராட்டம்..!! எச்சரிக்கை..!!

Wed Mar 1 , 2023
ஆவின் பால் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வேண்டும் என தொடர்ச்சியாக பால் உற்பத்தியாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆவின் பால் கொள்முதலுக்கான விலையை குறைத்து வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள், தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் வழங்கி வருவதால், ஆவின் பால் பண்ணையில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், மதுரை மத்திய பால்பண்ணையில் பொது மேலாளரை […]
Sapne me Milk Girna

You May Like