வைரஸை விட மோசமானது இந்த பாக்டீரியா!… அமெரிக்காவை அச்சுறுத்தும் புதிய நோய்!… அறிகுறிகள், சிகிச்சை முறைகள் இதோ!

வேகமாக பரவி வரும் ஷிகெல்லா என்ற பாக்டீரியாவுக்கு அமெரிக்காவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் அந்த நாட்டில் ஏராளமான மக்களை பாதித்து உயிர்களை பறித்ததுடன், இந்தியா உட்பட மற்ற உலக நாடுகளையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது. வைரஸ் தாக்கத்தின் பிடியில் இருந்து உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கானோர் கொத்துக்கொத்தாக மடிந்தனர். கோடிக்கணக்கனோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர். இருப்பினும் இதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் தற்போது ஷிகெல்லா என்ற பாக்டீரியா மக்களை அச்சுறுத்திவருகிறது.

இந்த பாக்டீரியா அமெரிக்காவில்அதிக நபர்களுக்கு பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. ஒருவருக்கு ஒருவர் மிக வேகமாக பரவும் தன்மையுடைய இந்த பாக்டீரியா, குறிப்பாக ஷவர்மா சாப்பிடுவதால் தான் பரவி வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த பாக்டீரியாவுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிகெல்லா பாக்டீரியா காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்துகிறது. , அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவின் தேசிய பொது சுகாதார அமைப்பு, வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷிகெல்லா பாக்டீரியா ஷிகெல்லோசிஸ் எனப்படும் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது மற்றும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடலில் காணப்படும், ஷிகெல்லா பாக்டீரியாவால் மாசுபட்ட உணவு அல்லது தண்ணீரை சாப்பிடுவதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ பரவுகிறது. இது பாலியல் தொடர்பு மற்றும் சிறுநீர் வழியாகவும் பரவக்கூடும் என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த பாக்டீரியாவின் அறிகுறிகள், பொதுவாக 5-7 நாட்கள் நீடிக்கும், காய்ச்சல், வயிற்று வலி, உணர்வு ஆகியவை ஏற்படும். மோசமான உடல்நலம் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டால் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நோய்வாய்ப்பட்ட நபரின் சிறுநீரில் ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டது. எனவே நம்மை நாமே பாதுகாப்பாக வைத்திருக்க அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது

KOKILA

Next Post

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?... உலகின் மிக பிரம்மாண்ட ரிசார்ட் இதுதான்!... எத்தனை ஆச்சரியங்கள், அதிசயங்கள் தெரியுமா?

Fri Mar 3 , 2023
உலகில் மிக அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அட்லாண்டிஸ் தி ராயல் என்ற பிரம்மாண்ட ரிசார்ட்டில் உள்ள சுவாரஸ்யங்களை பார்க்கலாம். துபாயை தளமாகக் கொண்ட ஹோட்டல் நிறுவனமான கெர்ஸ்னர் இன்டர்நேஷனல் லிமிடெட், கடந்த ஜனவரி மாதம் அட்லாண்டிஸ் தி ராயல் என்ற சொகுசு ரிசார்ட் அறைகள் கொண்ட ஹோட்டல் திறந்தது. இந்த ஹோட்டலில் தங்குவதற்கு அதிகபட்சமாக ஒரு இரவுக்கு 1000000 டாலர் அதாவது 85 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக பெறப்படும் […]
atlantis the royal

You May Like