தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 191-வது பகவான் வைகுண்டசாமி பிறந்த நாளினை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 8ஆம் தேதி வேலை நாளாக இருக்கும்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பகவான் வைகுண்டசாமி பிறந்த நாளிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 04.03.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

'திகு திகு...." வென்று எரிந்த தீயில் கருகிய பெண்! உல்லாச புகைப்படங்களை பகிர்ந்ததால் காதலன் செய்த கொடூரம்!

Thu Mar 2 , 2023
காங்கேயம் அருகே இளைஞர் ஒருவர் தனது காதலியை மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வரதப்பன் பாளையம் காலனியைச் சார்ந்தவர் செந்தில். இவரது மனைவியின் பெயர் பிரேமா(30), இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக செந்திலை பிரிந்த பிரேமா அதே காலணியில் வேறொரு வீடு எடுத்து தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். அருகில் […]
IMG 20230302 WA0095

You May Like