ஊழலைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பாஜக அரசு ஊழல் செய்ததாக காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோ மக்களவையில் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் முகத்தை ‘டெட்டால்’ கொண்டு கழுவ வேண்டும். நரேந்திர மோடி அரசு மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து அவர் மக்களவையில் கடுமையான கருத்தை முன்வைத்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு இரண்டு முறை வாட் வரியைக் குறைத்த பிறகும், வாட் வரியைக் குறைக்காத மாநிலங்களின் பட்டியலை வாசித்தார். இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் டீசல் மீதான வாட் வரியை ஏன் உயர்த்தியது என்று காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோயிடம் கேள்வி எழுப்பினார்.