சமூக ஊடக பிரபலங்கள், விளம்பரப்படுத்தும் போது இந்த வார்த்தைகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்… மத்திய அரசு உத்தரவு..

இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் அதிக ஃபாலோயர்களை கொண்ட சமூக ஊடக பிரபலங்கள், பிரபலமான பல நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்ற அவற்றின் தயாரிப்புகளுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வதாக கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து சமூக ஊடக பிரபலங்களுக்கான சில வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது.. அதன்படி, சமூக ஊடக பிரபலங்கள் பணம் வாங்கிய பிறகு எந்த பிராண்டிற்கும் ஒப்புதல் அளித்தால், அவர்கள் அந்த பிராண்டுடன் தங்கள் தொடர்பை அறிவிக்க வேண்டும்

social media md

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள், பிரபலங்கள் மற்றும் மெய்நிகர் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கும் கூட இந்த புதிய விதிகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது… இந்த புதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்காத பட்சத்தில் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் ( Social Media Influencers) ரூ. 10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவித்திருந்தது.. முதல் முறை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம், இரண்டாவது முறை ரூ.20 லட்சம், தொடர்ந்து மீறினால் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்..

இந்நிலையில் சமூக ஊடகத் தளத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளை அங்கீகரிக்கும் பிரபலங்கள், விளம்பரம், ஸ்பான்சர், ஒத்துழைப்பு அல்லது கட்டண விளம்பரம் போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், பணம் செலுத்திய அல்லது பண்டமாற்று பிராண்ட் ஒப்புதலுக்கு, advertisement”, “ad,” “sponsored”, “collaboration”, or “partnership” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம்…

இருப்பினும், இந்த சொல் ஹேஷ்டேக் அல்லது வீடியோவின் தலைப்பில் குறிப்பிடப்பட வேண்டும். எளிமையான, தெளிவான மொழியில் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.. தனிநபர்கள் தாங்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தாத எந்தவொரு பொருளையும் அங்கீகரிக்கக் கூடாது.

சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் காண்பிக்கும் தயாரிப்பின் விளம்பரத்திற்காக பணம் பெற்றிருந்தால், அதனை தங்களைப் பின்தொடர்பவர்களுக்கு தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்கள். ஒப்புதல் அளிப்பதற்கு முன், தயாரிப்பு மற்றும் சேவையை உண்மையில் பயன்படுத்தியிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில், நுகர்வோர் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்..” என்று தெரிவிக்கப்ப[ட்டுள்ளது.

RUPA

Next Post

குடும்ப பிரச்சினை காரணமாக ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை……! கிருஷ்ணகிரி அருகே சோகம்…..!

Tue Mar 7 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள கல்லாவி அருகே உள்ள மேட்டுதெருவில் வசித்து வந்தவர்கள் தான் சுரேஷ் மற்றும் அம்மு தம்பதிகள். இரு பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமாக 5 குழந்தைகள் இந்த தம்பதியினருக்கு இருந்த நிலையில் குடும்ப பிரச்சனை என் காரணமாக, அம்மு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மன அழுத்தம் காரணமாக, தன்னுடைய மூத்த 3 குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின்னர் […]
Krishnagiri Sucide

You May Like