தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்.பி.யாக இருப்பவர் கனிமொழி. இவருடைய கணவர் அரவிந்தன். இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இதனை அறிந்த கனிமொழி எம்பி, உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார். தற்போது அரவிந்தனின் உடல்நிலை குணமடைந்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.