மத்திய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு கியூட் நுழைவுத் தேர்வு கட்டாயமாகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான கியூட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் தேசிய தேர்வு முகமை மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பலர் விண்ணப்பிக்கவும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.
2023இல் கியூட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை மார்ச் 30ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் மார்ச் 30ஆம் தேதி இரவு 9.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பணம் செலுத்துவதற்கான நடைமுறையை இரவு 11.50 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூட் தேர்வு விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 3 வரை திருத்தங்களைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://nta.ac.in மற்றும் https://cuet.samarth.ac.in-ஐ பார்வையிடலாம். மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.