திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள பாரதிபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் செல்வராஜ் டயானா மேரி என்ற பெண்ணை கடந்த 4️ வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த தம்பதியினருக்கு இன்று வரையில் குழந்தை பாக்கியம் இல்லை.
இத்தகைய நிலையில், அதே தெருவில் இருக்கின்ற மாமியார் முன்னாசியம்மாள் வீட்டிலேயே மனைவியுடன் செல்வராஜ் வசித்து வந்தார். அதோடு குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர் அடிக்கடி குடித்துவிட்டு மாமியாரிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனை பலமுறை சந்தித்த பின்னரும் கண்டுகொள்ளாமல் அதனை தொடர்ந்து இருக்கிறார். இதன் காரணமாக கடந்த 5ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்து செல்வராஜ் மாமியாருக்கு மறுபடியும் பாலியல் தொல்லை கூறப்படுகிறார். இதன் காரணமாக, ஆத்திரமடைந்த மனைவியும், மாமியாரும் சேர்ந்து அடுப்பில் கொதிக்க வைத்திருந்த தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து எடுத்து வந்து செல்வராஜ் மீது ஊற்றி விட்டனர். இதில் உடல் வெந்து செல்வராஜ் வலியால் துடித்திருக்கிறார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவர்கள் மனைவி ஊற்றிய வெந்நீர் அவருடைய அடிவயிற்றில் பட்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து தயாநிதி இன்னாசியம்மாள் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வடக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர் கொடுத்துவிட்டு தகராறு செய்த மருமகனை கொதிக்க நீரை ஊற்றி கொலை செய்த மாமியாரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.