கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சார்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆண்ட்ரோ (29). அழகிய மண்டபம் பகுதியில் இருக்கின்ற தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மற்றும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.
அதாவது பேச்சுப் பாறை பகுதியைச் சார்ந்த ஒரு நர்சிங் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சைபர் கிரைம் காவல் துறையினர் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். இவர் நேற்று நாகர்கோவில் கிளை சிறையில் இருந்து திடீரென்று பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கான காரணம் என்னவென்று இதுவரையில் தெரியவில்லை. ஒருவேளை சிறையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் மாற்றப்பட்டாரா? அல்லது அவர் இங்கேயே இருந்தால் தடயங்கள் மற்றும் சாட்சிகளை கலைக்க முற்படுவார் என்ற காரணத்தால், அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டாரா? என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை.