fbpx

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!… தங்கத்தை தட்டிச்சென்ற இந்திய வீராங்கனை!…

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்று இந்தியா வீராங்கனை நீது காங்கஸ் சாதனை படைத்துள்ளார்.

உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் 4 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர். அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற இதன் அரையிறுதி போட்டி ஒன்றில் 48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நீது காங்கஸ், கஜகஸ்தான் வீராங்கனை அலுவா பல்கிபெளோவாவை எதிர்த்து விளையாடினார். அதன்படி போட்டியின் முடிவில், 5-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்ற நீது காங்கஸ், இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதையடுத்து இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் நீது காங்கஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன்அட்லெட்செட்கை எதிர்கொண்டார். போட்டி துவங்கியது முதலே ஆதிக்கம் செலுத்தி நீது காங்கஸ், இறுதியில் 5-0 என்ற புள்ளிகள் பெற்று மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். தங்கம் வென்ற இந்திய வீராங்கனை நீது காங்கஸ்-க்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Kokila

Next Post

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. இனி பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் செலுத்தினால் போதும்..

Sun Mar 26 , 2023
நாட்டில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான வரி வசூல் முறையை கொண்டு வர மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.. சிஐஐ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நிதின் கட்கரி, நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக அடுத்த 6 மாதங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் அமைப்புகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் […]

You May Like