#Rain: இந்த தேதிகளில் எல்லாம் கனமழை…! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழகத்தில் 28-ம் தேதி வரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 27,28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


மேலும் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

சூப்பர் அறிவிப்பு..!! தெற்கு ரயில்வேயில் 9000 காலியிடங்கள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sun Mar 26 , 2023
இந்தியாவில் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை இருந்து வருகிறது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் ரயில் நிலைய அலுவலர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில் இயக்கத்தில் முக்கிய பணியாற்றும் நிலைய அலுவலர் பணியிடங்கள் 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வேயில் சுமார் 9000 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட […]
indian railways irctc 1601651073

You May Like